பறவைகள் பறக்கும் வான வீதியிலே/
பரவையில் அசைப்போம்
துடுப்பின் கைகளிலே/
குடும்பத்தின் சுமையை
மனதில் சுமந்தே/
கொத்து கொத்தாய்
மீன்பிடிப்போம் நிதமே/
மனையின் காதல்
மனதில் மிதக்க/
கடலின் காதல்
நாசியில் கலக்க/
உயிரை மாய்த்து
வயிற்றை நிரப்பி/
வணிகம் செய்யும்
வாலிபம் யாமே/
மக்கள் நினைப்போ
மன்னவன் மீது
மன்னவன் நினைப்போ
மக்கள் மீது/
அலைகளைப் போலே
அசைந்து வந்து/
அன்றாட வாழ்வை
கடக்குது இங்கே/
கடலின் வாழ்க்கை கரைசேரும் வரை/
கர்ணனின் வாழ்வோ கொடை வழங்கும் வரை/
உடலின் வழியே
ஒட்டாத உயிராய்/
நலமாய் வாழ
நாணயம் தருமே/
0 comments:
Post a Comment