விடியும் வரை காத்திரு
விடியும் வரை காத்திரு
வியூகங்களை வகுத்திடு
விந்தைகளை காட்டிடு
விருப்பங்களை நிறைவேற்றிடு
இரவுகளை சுவாசித்திடு
இரவல் வாழ்வை நினைத்திடு
இல்லறத்தை உயர்த்திடு
இழிவு குணத்தை வெறுத்திடு
நல்லறத்தை வளர்த்திடு
நல்குணத்தை விதைத்திடு
நன்மலராய் உதித்திடு
நறுமணத்தை பரப்பிடு
அணிச்சயாய் பூத்திடு
அடியேனை நினைத்திடு
அன்பையே தெளித்திடு
அமிர்தமாய் பருகிடு
ஏக்கத்தை துரத்திடு
ஏணியை மதித்திடு
ஏழ்மையை சுவைத்திடு
ஏற்றத்தில் வாழ்ந்திடு
காதலை போற்றிடு
கயவனை தூற்றிடு
காலைவரை காத்திரு
கண்மணியே
நானே உன் திரு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment