உன்னால் ஒரு மயக்கம்
கட்டிளம் பருவத்திலே
காதலை சுமந்தோமே
காதலித்த பின்னாலே
கனவுகளில் கலந்தோமே
பதினைந்து நிமிடத்திலே
பதியமான வாரிசுதனை
பார்த்திடவே நாளும்
தவம் கிடந்தோமே
காதலின் அடையாளமா இது
இல்லறத்தின் வேதமா அது
வசந்தக்காற்று வாசலில்
நின்று கொண்டு
சதா ரனமான வாழ்வுதனை
சாதாரணமாக்க கேட்டதிங்கே
மறுமொழியும் சொல்லாமல்
மயங்கி நின்றேன் உன்னாலே
இத்தனையும் கடந்து
இல்லற மழையில் நனைந்து
இன்ப ஊஞ்சலில் ஆடியபோது
ஒவ்வொன்றாய் நானும் மறந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment