#ஞாலமே #எதற்காக #நீ
ஈசன் பார்வதியின் அருள் பெற்று
இனிதே மலர்ந்த பெரும் உலகே
இன்னுமேன் வாழுகின்றாய்
இக்கட்டான நிலைதனிலே
ஆலயங்கள் அமைத்து அனைவரையும் அழைத்து
அமைதியை நாடிய மனங்களை எல்லாம்
சிதறிய துண்டுகளாய் சிதைத்தது ஏனன்று
ஒன்றும் அறியாத பாலகன் கூட
ஓடி ஆடி ஒன்றாய் செபிக்க
தேடி வந்த யமனை நீயும்
தெருவில் நிறுத்த மறுத்த தேனோ
பொறுமையிலே எண்மடங்கென
புலவர்களும் பாடியதுண்டு
புத்தம் புதிய நாள்தனிலே
குப்தனுக்கு நீயும் பயந்ததேனன்று
இனியும் எதற்காய் நீயும் இருக்காய்
எல்லோர் அகத்திலும் விடத்தை விதைத்தாய்
நல்லதை செய்திட நாட்கள் வேண்டுமா
உள்ளதை தேற்றிட வாழ்வும் மிளிருமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment