அட்சயபாத்திரம்

ஆசைகள் பல மனதில் நினைந்து
ஐயிரண்டு திங்கள் என்னை சுமந்து
கனவுகளில் கண்ட சிறு விம்பமே
கனகராஜா எனும் ஒரு கும்பமே

கிருஷ்ணனின் கிருபை நுதலில் பட்டு
கிருஷ்ணலீலா பிறந்தாளே முதல் சிட்டு
தங்கத்தில் உயர்ந்த  தங்க அம்மாவே
தவமிருந்து பெற்ற தங்கராஜா யான்தானே

இம்மையின் அழகை காணும் முன்னே
கருவறை வாழ்வை காட்டியவளே அம்மா
கலை ஆன்மீகம் கல்வி கவியென
எல்லாம் புகட்டிட என்னதவம் செய்தீரோ

சித்தமெல்லாம் முத்தமிட்டு பெற்றிடவே என்னை
சத்தமெல்லாம் இதயத்திற்கு  தந்தவளே அன்னை
பிறந்தபோது நானும் பேரின்பம் கொண்டாயே
கனகம் எனும் அர்த்தம் கோர்த்து
(கனக)ராஜாவென அழைத்து ரசித்தாயே

அன்பின் இலக்கணமான அட்சயபாத்திரமே
அப்பாவின் வழி நடத்திய இரத்தினமே
முத்தமிழ் வடிவத்தின் முதல் அகரமே
ஆலாபனம் பாடி மகிழ்வோம் இத்தினமே

0 comments:

Post a Comment