அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்
அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால
நடப்பில்,
நிகழ்வுகளில்
எதிரிடைப்
பதிவுகளாக
இருக்கக்கூடியதாகும்.
குற்றங்களைக்
கடிந்துரைக்காமல்
நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி
மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம்
என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக
உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும்,
அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.
கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு
(மேத்தா)
என்னும்
வரிகளில் இவ்வுண்மை
உணர்த்தப்படுகிறது.
இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை
!
(ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
சமுதாயத்தில்
நீதியை
நிலைநிறுத்த
வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று
!
(மேத்தா)
என்னும் கவிதை உணர்த்துகின்றது.
அரசியல் அங்கதம்
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச்
சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே
!
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்
!
(தமிழன்பன்)
என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.
தேர்தல் காலங்களில் ‘வாக்குச் சீட்டுப் பெட்டிகள்’
வழிப்பறி
செய்யப்படுவது கண்டு வருந்தும் கவிஞர் பின்வருமாறு அங்கதம்
பாடுகிறார்.
மற்றவர்
குனியும்போது
ஆகாயத்தையும். . .
நிமிரும்போது
நிலத்தையும். . .
சுருட்டிக்கொள்ள
வல்லமை படைத்த
அரசியல்வாதிகள். . .
இந்த
வாக்குச் சீட்டுக்களை
வழிப்பறி செய்வது . . .
கடினமானதல்ல. . .
இவ்வகைகளில் அங்கதக் கவிதைகள் விரியும்.
|