பாப்பா பாட்டு பாடிய கவியே
பாவலர்கள் மனதிலோடும் நதியே
இசை வரியாய் வந்த சுதியே
அசைந்தாடுது அழகிய புவியே
எதுகையும் மோனையும் இருவரியே
ஈன்றெடுத்த தாய்க்கவியே
நவீன கவி வழியே வந்து
நர்த்தனம் புரிகின்றாயே
ஆண்டுகள் பல உருண்டோடியே
அச்சுப்பதித்ததுன் தேனகவையே
மா கவியின் மரியானா ஆழியே
மாந்தரின்னும் காணாத தொணியே
செம்மொழி வளர்த்த சித்திரமே
சங்காய் முழங்குதுமுன் சரித்திரமே
சந்தங்கள் வந்து சங்கீதம் பாட
சமரசம் காண்கிறதே அதனிசையோட
காலங்கள் கடந்து போக
கவிநயமோ மனதிலூற
துளியாய் துளியாய் சுவைக்கின்றேன்
திகட்டிவிடும் என்றெண்ணி
எனக்கு வாழ்த்த தகுதியில்லை-கவியே
இன்று முளைத்த காளான் நானே
0 comments:
Post a Comment