விளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது


அன்றொரு நாள் காதல்
காதல் வாசம் வீசி
என் இதயத்தை
ஸ்பரிசம் செய்தாய் நீயே
இதையறிந்து என் மனசு
காதல் ஏற்று உனக்கு
அத்திவாரமிட்டு
அடைக்களம் தந்துவிட்டதே அன்பே
சல்லாபம் கொள்ள ஆசைப்பட்ட நீ
காதல் சங்கமிக்க மறுத்ததேன்
மாமனார் மகளே
காதல் பெயரை சொல்லி
மோதல் செய்தது நீதான் காதலியே
விளையாடிப் பார்க்க நானென்னை
விளையாட்டு பொம்மையா
அறியா எனது தூய மனது
அடிமையாகிப் போனது
உன் வாசகத்திற்கு
வாழ்க்கையில் விளையாடாதே பாவியே- காரணம்
வஞ்சகக்காரியறியா என் மனதே
வாழும்போதே வாழ்த்திவிடுகிறேன்
நீ வளமுடன் வாழ்கவென்று

0 comments:

Post a Comment