ஆண்டவன் அருளிய
ஆசிரிய தெய்வங்களே
அறிவை புகட்டிய
அழகிய ரத்திணங்களே
இன்னொரு
அன்னையான தாய்குலங்களே
இறைவன் படைத்த அன்பெனும்
ஊற்றுக்களே
பொதுமொழி
கற்றுத்தந்த பொக்கிசங்களே
பொறுமையில்
சிறந்த புண்ணியவான்களே
கணிதத்தை
கற்றுத்தந்த கணவான்களே
புனிதத்தை
தன்னகத்தே கொண்ட புத்தன்களே
வரலாற்றை சொல்லித்தந்த
வாத்தியார்களே -நீங்கள்
வரலாறு படைக்க
வாய்ப்பை தந்தவர்களே
தமிழின்
சுவையுணர்த்திய தளபதிகளே
கவி பாவலராய்
தடம் பதிக்க செய்தவர்களே
பாடங்கள் பல
புகட்டிய பாக்கியவான்களே –இன்றும்
மனதில்
கல்வெட்டாய் பதிந்திருப்பது வாக்கியங்களே
பல்லாண்டு
பல்லாண்டு வாழனும் தெய்வங்களே -அடியேன்
தலை வணங்கி
வாழ்த்துகின்றேன் வாத்தியார்களே
0 comments:
Post a Comment