மாயை காட்டிய பேதை

சின்னஞ்சிறு வயதினிலே
சிக்கனமின்றி விளையாடினாள்
அத்தை மகன் வருவானென்று
அக்கரையாய் காத்திருப்பாள்
தீனிசாமான் தின்று தின்று
திரவியமாய் கதை படிப்பாள்
ஓடியாடி விளையாடி-நிதம்
உள்ளத்திளே குடியிருந்தாள்
பாசம் என்ற சொல்லுக்குள்ளே
பக்தியை நிதம் பதித்துவைத்தாள்
வயது கொஞ்சம் ஏற ஏற
வாட்ட சாட்டம் வாங்கிகொண்டாள்
கலகலப்பாய்  நகர்ந்த வாழ்வு
கட்டளிந்த பருவம் காட்டி
நாணம் வந்து நட்பை தடுத்து-
பீதிப்  புயல் வீசியது
போன மச்சான் திரும்புவதாய்
பொய்யைக்கூட சொல்ல மறுப்பான்
நீலி கண்ணீர் விட்டு நிதம்
நிம்மதியை களைத்திடுவாள்
காதல் எனும் காந்தம் எய்தி
கவர்ந்திளுத்தாள் இரும்புதனை
மாயவலையில் சிக்கி தினம்
பேயவளை காதல் கொண்டேன்
கடிகார முள்ளு ஓடும்போது
கண்ணிமைகள்  மூடும்போதும்
காந்தயலையாய் வந்து தினம்
கனவில் படம் காட்டிடுவாள்
மாலை நேர வேளையிலே
சாலையோர மழைதூரளிலே
ஒற்றைகுடை பிடித்து  சென்று
ஒய்யாரமா காதல் செய்தோம்
ஆசைகாட்டும் தாசியெல்லாம்
அந்தநேரம் மட்டும்தானே
பக்தி கொண்டதேவதையெல்லாம்
காதல் முக்தி பெற்று வாழ்வாதானே!.............





0 comments:

Post a Comment