உயிர் தந்த உயிரே


சின்வனாய் நானிருந்தபோதம்மா
சின்னவரு என்று செல்லமாயழைத்த அம்மா
வறுமை வந்து வலைவிரித்தபோது
பொறுமையாக பசி தீர்த்தவளே அம்மா
பயந்து பயந்து ஒதுங்கியோடிய போதெல்லாம்
நயங்து நயந்து துனிவூட்டியவளே அம்மா
பிணி வந்து பிரச்சினை செய்தபோது
தனியா நின்று தாங்கிச் பிடித்தவளே அம்மா
வறுமையின் தன்மையை காட்டி வளர்த்தாளம்மா
வாழ்க்கையின் சுவையை உணர்ந்து கொண்டேனம்மா
பத்து மாதங்கள் சுமந்ததா அம்மா-என்றும்
எனது சொத்தே நீங்கள்தான் அம்மா
நாளும் புத்தியை உறைப்பதிலே அம்மா
தோல் கொடுத்தவளே நீங்கதானம்மா
அன்பை பொழிவதில் நீங்க ஆகாயமம்மா
அடைமழையாய் தினமும் தொடருதம்மா
ஆனந்தகண்ணீரே அடிக்கடி வருகுதம்மா-அதனால்
அணை கட்டி கவிவடிக்கினேனம்மா
பொறுமைக்கு அடையாளமானது பூமியம்மா-அதையும்
அருமையாக மிஞ்சிவிட்டீரே அம்மா
எனது இதயப்துடிப்பே நீங்கதானம்மா
எந்நேரமும் லப்டப் நாதமாய் ஒலிப்பது நீங்கதானம்மா
மங்காத மனது கொண்டதாள் அம்மா
தாத்தா மகிழ்வாய் இட்ட நாமமோ தங்கம்மா
தரணியில் அவதரித்த தங்க அம்மா
தயாள சிந்தையில் வாழனும் நீங்களம்மா
ஆண்டுகள் பல வாழனுமம்மா-அதில்
ஆயுள்வரை என்னை சுமக்க வேண்டுமம்மா
வாழ்க தாயே வளமுடன்
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு

0 comments:

Post a Comment