பூக்கள் பூக்கள் நேரம்

ஆதவன் ஒளியால்
           அனைத்தும் துளிர்க்கும்/

ஆண்டவன் வழியால்
                       அற்புதம் நடக்கும்/
பூக்கும் மலர்கள்
           புன்னகை சேர்க்கும்/
புத்தம் புதிய
                      பொழுதும்  வாழ்த்தும்/
சித்தம் கவர்ந்த 
                   அத்தனை மலர்களும்/
சிந்திய வாசத்தால் 
               எண்ணங்களும் மகிழும்/
வாழ்க்கையின் தத்துவமதை
          வைகறையில் உணர்த்தும்/
வசந்தகாலமாய் மாறியே
      வண்ணத்தமிழாய் மணக்கும்/



0 comments:

Post a Comment