ஐந்திணைக் காதல்

குறிஞ்சி
*********
குறிஞ்சி மலை அடிவாரத்திலே
குடியிருக்கும் சிலையழகே/
உன் காந்த பார்வையிலே
உள்ளமெங்கும் நெகிழுதடி/
பாய்ந்துவரும் நதியினூடே
தேய்ந்துபோகா கூலாங்கல்லாய்
தைரியமாய் வாழும் காதல்
தனித்துவத்தின் நம்பிக்கையடி/
வசந்தகால பொழுதினிலே
வந்தமர்ந்த அறுவடையாய்/
காதல் ராகம் பாடியுந்தான்
தேடல் வேகம் கூட்டுதடி/
சில்லென்ற குளிர்காற்றும்
சிவந்த வான முகவழகும்/
நெஞ்சமெல்லாம் நிறைகுடமாய்
நிறைவுதனை வழங்குதடி/
சங்கு போன்ற உன் கழுத்தும்/
சாந்தமான திருமுகமும்
கயல்விழியின் பொய்கையிலே
காதல்மொழி பேசுதடி/
மார்கழியின் கடுங்குளிரும்/
மங்கையரின் நீராட்டும்/
குவிந்த மலர் சோலையாக
குறிஞ்சிக் காதல் இயம்புமடி.....






0 comments:

Post a Comment