இதயவானிலே ஓர் இளைய நிலா



அல்லி மலரும் பொழுதினிலே
அழகாய் பொழியும் வெண்மதியே
தரணியெங்கும் மணம் பரப்பி
தண்மையினை தந்திடுவாயே
இதயமெனும் மீலத்திலே
உதயமான பெண்ணிலவே
இன்பவொளி நீ சிந்தி
இதமாக நகர்ந்தாயே
காதலெனும் ஒரு உருவம்
காணாமல் தினம் வாட
கண்ணியமாய் காத்திருந்து
கானங்களும் பாடியதே
நீ சிந்தும் புன்சிரிப்பும்
நிதம் குளிரும் நிலப்பரப்பும்
நிரந்தரமாய் நின்று கொண்டு
நிம்மதியை நீட்டியதே
மாதத்திலே இருமுறையும்
மங்காத திருநடையும்
நான்கறையில் நாணமிட்டு
நலம்வாழ கூறுதிங்கே
எண்ணங்களும் எழுத்துகளும்
இதயவானில் உலாவுகையில்
வண்ணமின்றி நீந்திவரும்
வாலிப நிலவும் நீதானே


0 comments:

Post a Comment