மனமென்னும் மாளிகையில்
மார்கழியாய்த் திகழ்பவளே//
மங்காதத் தாரகையாய்
மாலையிலே குளிர்பவளே//
அன்பென்ற ஆணிவேராய்
அடிமனதில் நிறைந்திருக்க//
ஆண்டவனின் படைப்பினிலே
அதிசயமும் நீதானே//
இதயங்களும் இயற்கையுமே
இருவடிவ மூச்சாகி/
ஆழியான அன்புணர்வு
ஆட்சியுமே நடத்திடுதே//
ஊற்றெடுக்கும் காதலிலே
உயிரூட்டும் உன்னன்பு//
நானிலத்தின் நாயகனாய்
நல்லாட்சி நடத்திடவே//
காதல்மொழிப் பேசிடவா
காற்றலையில் மிதந்திடவா//
அன்பென்ற மொழிப்பேசி
ஆயுள்வரை வாழ்ந்திடுவோம்//
0 comments:
Post a Comment