அன்பில் நிறைந்தவளே


மனமென்னும் மாளிகையில்
    மார்கழியாய்த் திகழ்பவளே//
மங்காதத் தாரகையாய்
    மாலையிலே குளிர்பவளே//
 அன்பென்ற ஆணிவேராய்
        அடிமனதில் நிறைந்திருக்க//
ஆண்டவனின் படைப்பினிலே
            அதிசயமும் நீதானே//
 இதயங்களும் இயற்கையுமே
          இருவடிவ மூச்சாகி/
ஆழியான அன்புணர்வு
      ஆட்சியுமே நடத்திடுதே// 
ஊற்றெடுக்கும் காதலிலே
        உயிரூட்டும் உன்னன்பு//
நானிலத்தின் நாயகனாய்
       நல்லாட்சி நடத்திடவே//
காதல்மொழிப் பேசிடவா
    காற்றலையில் மிதந்திடவா//
அன்பென்ற மொழிப்பேசி
     ஆயுள்வரை வாழ்ந்திடுவோம்//



0 comments:

Post a Comment