தலைப்பு-மழைத் தேடும் மானிடன்
***********************************************
பல்லவி:
கார்மேகமே தேடியநீரே நீங்கி போகலாமோ
ஆறோ வேரோ குளிராதோ பாரோ
வான் மேகமே தினம் கை நீட்டவே
பார் எங்குமே தனி சந்தோசமே
கார்மேகமே தேடியநீரே நீரே…
சரணம் 1:
மரம் வெட்டும் மானிடா
மதியைத் தீட்டடா
மழைக் காலை ஊன்றவே
மரத்தை கூட்டடா
காட்டை விட்டு ஓடிடும் விலங்கு முன்னே
கவலையில் மிதக்குதே மரக்கன்று கண்ணே
பொன் பூமியே நாளும் குளிர மேக நாதனைத் நாடு
ராவணனத் தேடு
கார்மேகமே தேடியநீரே நீரே…
சரணம்:2
மழை வேண்டிப் பாடவே
மண்ணும் வாழ்த்துமே
விதையோடு வாழவே
பாரும் சீதமே
கூட்டில் கூடும் குருகுக்கு வழியில்லையோ
நீரூற்றி தேற்றியே வாழ்வூட்டலாமோ
நன்மை செய்யவே சாதகப் பறவையை நாளும் தேடிப்பாரு
கனகதாரம் பாடு
கார்மேகமே தேடியநீரே நீரே…
தாய்மையின் தியாகம்
குருவிகளின் குக்கியில் குடல்கள் சுருங்கிட
குவலயத்தில் எங்குமே இரைகளை தேடிட
தாய்மையின் பந்தமோ தரணியில் ஓங்கிட
சேய்களின் வாழ்வுக்காய் தியாகம் செய்யுதே
குவலயத்தில் எங்குமே இரைகளை தேடிட
தாய்மையின் பந்தமோ தரணியில் ஓங்கிட
சேய்களின் வாழ்வுக்காய் தியாகம் செய்யுதே
#நற்பண்புகளின்_பக்கம்_பிள்ளைகளை #அழைத்தல்
பள்ளிக்கு நாமும் சேர்ந்து சென்றிடுவோம்
பாதையில் பாடல் பாடியே ஆடிடுவோம்
துள்ளிப் பாய்ந்திடும் வெண் முயலினமாய்
தூய சிந்தனைகளை நாளும் நுழைத்திடுவோம்
ஓடி ஆடி விளையாடிய நேரம்
ஒற்றுமை கீதம் பாடிய வாரம்
பாடி ஆடி வந்தப் பறவையாய்
பண்பாய் நடந்தே பாரில் மிளிர்ந்திடுவோம்
வகுப்பறையில் நித்தம் வசந்தம் வீசிடவே
வண்ணத் தமிழால் நல்லதை கற்றிடவே
எண்ணத்தில் நம்பிக்கை வளர சகாவே
இனிய மனதுடன் இன்றே வந்திடு
ஒற்றுமை கீதம் பாடிய வாரம்
பாடி ஆடி வந்தப் பறவையாய்
பண்பாய் நடந்தே பாரில் மிளிர்ந்திடுவோம்
வகுப்பறையில் நித்தம் வசந்தம் வீசிடவே
வண்ணத் தமிழால் நல்லதை கற்றிடவே
எண்ணத்தில் நம்பிக்கை வளர சகாவே
இனிய மனதுடன் இன்றே வந்திடு
சலங்கை ஒலி கேட்குமா
காதலை நீயும் மனதில் சுமந்து/💚
காதலனை கவரும் சலங்கையும் அணிந்து/
நடந்து நடந்து வருகையிலே அன்பே/
அன்னமும் நடைபயில ஆவலோடு வந்திடுமே/
இதமான இனிய ஓசை மழை/
எங்கும் அழகாய் ஒலித்து பொழிகையிலே/
அகத்தில் பதிந்த அளவில்லா அன்பினை/
புறத்தில் உணர்த்திடும் புதுமையான சலங்கையோ/
கலாம் கண்ட கனவுகள்
ஐயா கண்ட கனவுகள் பல/
அதில் ஆயிரம் சுவடுகள் தொட/
ஆழ்மனதில் பதிந்த நினைவுகளை கோர்த்து/
அற்புதமாய் பல அறிவியல் படைத்து/
இளைஞர்களின் எதிர்காலம் இனிமைப் பெற/
எப்போதுமே கண்டாரே இலட்சிய கனவு/
அவ்வப்போது தோன்றிய கானல்நீரல்ல கனவு/
சிகரம் தொட்டிடும் சிந்தனைக் கனவு /
ஐக்கூ
எரியும் நெருப்பு/
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்
திறந்த கோழிக் கூடை/
மூடப்படாமலே இருக்கின்றன/
குழந்தையின் கண்கள்
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்
திறந்த கோழிக் கூடை/
மூடப்படாமலே இருக்கின்றன/
குழந்தையின் கண்கள்
Subscribe to:
Posts (Atom)