#கவியுலகப்_பூஞ்சோலை_4ஆம்_ஆண்டு_விழா_பாடல்_ #போட்டி_2 பாடல் : ஆராரிரோ பாடியதாரோ

தலைப்பு-மழைத் தேடும் மானிடன்
***********************************************
பல்லவி:

கார்மேகமே தேடியநீரே நீங்கி போகலாமோ
ஆறோ வேரோ குளிராதோ பாரோ
வான் மேகமே தினம் கை நீட்டவே
பார் எங்குமே தனி சந்தோசமே

கார்மேகமே தேடியநீரே நீரே…

சரணம் 1:

மரம் வெட்டும் மானிடா
மதியைத் தீட்டடா
மழைக் காலை ஊன்றவே
மரத்தை கூட்டடா
காட்டை விட்டு ஓடிடும் விலங்கு முன்னே
கவலையில் மிதக்குதே மரக்கன்று கண்ணே
பொன் பூமியே நாளும் குளிர மேக நாதனைத் நாடு
ராவணனத் தேடு

கார்மேகமே தேடியநீரே நீரே…

சரணம்:2

மழை வேண்டிப் பாடவே
மண்ணும் வாழ்த்துமே
விதையோடு வாழவே
பாரும் சீதமே
கூட்டில் கூடும் குருகுக்கு வழியில்லையோ
நீரூற்றி தேற்றியே வாழ்வூட்டலாமோ
நன்மை செய்யவே சாதகப் பறவையை நாளும் தேடிப்பாரு
கனகதாரம் பாடு

கார்மேகமே தேடியநீரே நீரே…

0 comments:

Post a Comment