அன்னை

அன்னையின் கற்பித்தலில்
அகிலத்தை வென்றிடுவோமே
****************************************
அன்பை பாலாக்கி அகரத்தை ஊட்டியவளே//
ஆசானை தான்மாறி ஆற்றுப்படுத்திய மாதாவே//
தமிழ்ப்பாட புத்தகத்தை மனப்பாடம் செய்யச்சொல்லி//
மாலைப்பொழுது ஆனதுமே தடியோடு நின்றவளே//
கண்டிப்போடு கற்பித்து கல்வியிலே உயர்த்தினாயே//
நீ சொல்லித் தந்த சொற்களெல்லாம்//
சுருக்குப்பை சல்லி சத்தமாகி//
இப்போதும் மனதினிலே இனிப்பாக கேட்கிறதே//
முத்தமிழின் சுவாசத்தை முதன்முதலாய் கருவறையில் //
தாய்மொழியின் உன்னதத்தை தனயனுக்கு அளித்தாயே//
அம்மா உந்தன் கலை அகத்தாலே//
அகிலம் போற்றும் மானுடன் ஆனேன்//



0 comments:

Post a Comment