மழையே
***********
மழையே மார்கழியில்
நீயும் பொழிந்தாலே
பொழிந்தாலே பூமியும்
பூரிப்பு அடையுமே
அடையுமே அறுவடை
பெருகிய செல்வமே
செல்வமே சீதேவியாய்
சீக்கரம் நுழையுமே
நுழையுமே வாழ்வில்
துன்பம் கலையுமே
கலையுமே கதிர்கள்
குவிந்து நிறையுமே
நிறையுமே நிம்மதி
நீடி வளருமே
வளருமே வசந்தமும்
நாள்தோறும் பெருகியபடியே
0 comments:
Post a Comment