எங்க ஊருத்திருவிழா


ஒலிபெருக்கிச் சத்தங்கேட்டு உற்சாகமாய் நாமெழும்பி/
உள்ளுர் முருகனை உள்ளத்தில் நினைந்து/
உடனே போனோமே ஊர்த்திருவிழா கொடியேற்றத்திற்கு/
புரோகிதரும் கிரியைகள் செய்து முடிய/
இனிதே விழா தொடங்கி மகிழ/
இதயத்தில் சந்தோசம்
உதித்த தருணமே/
இறைவனின் இன்னருள் புரிந்த மகுடமே
கிராமத்து மக்கள் கிளம்பி வந்து/
ஆடிவிழாவில் கலந்து மனம் மகிழ்ந்து/
காவடியாட்டத்தில் ஆடிப் பாடிய இடமே/
காலத்தால் அழியாத அழகியத் தடமே/



0 comments:

Post a Comment