எழுத்துக்களால் ஆயுதம் செய்வோம்














உணர்ச்சிகளை உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் அருவியாய்/
உண்மைதனை உலகறிய                                              
செய்யும் ஊடகமாய்/
உரிமையெனும் வேட்கைதனை
வென்றிடும்
எழுத்துக்களே/
பதியை வென்றிடும்
பக்குவமான
ஆயுதமே/
மாற்றத்தை மாற்றாது
மறவனாய் களமிறங்குமே/
ஒவ்வொரு நொடியும்
உள்ளத்திலே உலாவிடுமே/
ஊருக்கே உத்தமனாய்
சேவை செய்திடுமே/
உடலை அழிக்கும்
ஒரு  ஆயுதமுமல்ல/
இடரை பதிக்கும்
எழுத்துகளே ஆயுதம்/
ஆதிமுதல் இன்றுவரை
அவைதனிலே வலம்வரும்/
ஆக்கிரமிப்பு செய்திடும்
அற்சரமெனும் அசகாயசூரனே/
நாட்டைக் காக்கும்
இராணுவப்படையல்ல இது/
எண்ணத்தை தாக்கும்
எழுத்துப்படையே இது/
எழுத்துகளால் உண்டான
ஆயுதங்கள் பல/
இன்றும் கூட
துவம்சம் செய்து/
இ(எ)ம்மை காக்க
இறவாமல் வாழுதே

0 comments:

Post a Comment