புதுக்கவிதை
**************
எண்ணத்திலே உதித்த வார்த்தைகளை
இன்புடனே கோர்த்து எடுத்து
யார்த்து பாடும் கவிநடையே
யதார்த்தம் உணர்த்தும் புதுக்கவிதை
பாமரர் முதல் பண்டிதர்வரை
பக்குவமான மொழிநடையில்
வாசித்து நாளும் பயனடையும்
வசந்தகவி இதுவன்றோ
உவமையும் உண்மையும் கோர்த்து
உத்திகளை ஏட்டில் பதித்து
சமூகம் விரும்பும் சந்தக்கவி
அங்கதமாய் ஒலிப்பது இக்கவியே
எதுகையு மோனையும் இதிலிருக்கும்
இனித்திடும் சந்தங்களும் மலர்ந்திருக்கும்
படிமமும் தொன்மமும் கலந்திருக்கும்
சிலேடையும் முரணும் சிறப்பளிக்கும்
இருண்மையும் கூடவே நுழைந்து
எல்லையில்லா நயம்தனை படைத்து
அத்தனையும் சங்கமிக்கும் திடலாய்
அழகிய வெளிப்பாடே புதுக்கவிதை
வாசிப்போருக்கு நன்மை அளித்து
வாஞ்சையுடன் மனதில் பதித்து
மாந்தரெல்லாம் மகிழ்வாய் வாழ
மகிமை அளிப்பது புதுக்கவிதையே
முழுப்பெயர்-பழனியாண்டி கனகராஜா
புனைப்பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
திகதி-07.12.2018
முகவரி-கோணக்கலை தோட்டம்,
காவத்தை பிரிவு,
பசரை.
இது எனது சொந்த படைப்பென்றும் வேறு படைப்புகளின் பிரதியல்லவென்றும் உறுதிமொழி அளிக்கின்றேன்