எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!


அன்பும் அறிவும் இரண்டறக் கலந்து/
அன்றையத் தமிழனின் மனதினில் பதிந்து/
உருவாகிய அழகிய அறிவுக் கோட்டை/
எருவாகிப் போனதால் வீழ்ந்ததே வேட்கை/


பனுவல்கள் நாளும் பற்பல சேமித்து/
பாசத்துடன் அனைவரையும் ஒன்றாய் கோர்த்து/
தமிழனின் வரலாற்றை தரணியில் நிலைநாட்ட/
தாற்பரியமாய் எழுந்த தங்க மாளிகையிது/

கண்கள் இரண்டும் குருடாகிப் போனால்/
காட்சிகளை காண முடியுமா எமக்கு/
அறிவுக்கண்னை தீயிட்டு அழிக்க நினைத்தால்/
ஞானக்கண் மீண்டெழுமே தெரியாத உனக்கு/

வீரத்தமிழனின் பான்மையை விளங்காத மானிடா/
தீரயோசித்து தீர்மானிக்காத கயவனடா நீ/
புத்தங்கங்களைத் தானெரித்து பித்தனே மகிழ்ந்தாயடா/
மொத்தமான தாயகத்தின் சித்தமெல்லாம் கலங்குதடா/

நாமெல்லாம் தாயகத்தில் ஒரு இனமடா/
நமக்கென்று ஒரு குணமுண்டு புரியாதா/
அரக்ககுணத்தை நீ எரித்துப் போட்டு/
அறிவுக் கண்ணை திறக்க விடு/

வாசகசாலையில் பிறந்த வண்ணச் சிசுக்களை/
வஞ்சக எண்ணத்தால் நசுக்கினாயே பாவி/
தழிழனின் தார்மீக சொத்துடா அது/
தரணியெங்கும் பறைசாற்றும் தமுக்கமடா இது/

நாம் வாழ்ந்த வரலாறுதான் நூலகம்/
நாசமாகிப் போனதே எங்கள் தாயகம்/
எதிர்காலம் நாளை தமிழின் வாசகம்/
இடிக்க முடியாத அழகிய கோபுரம்/

வருங்கால ஆட்சியினை வசமாக்குவான் தமிழனென்று/
ராத்திரி வேளையிலே ரணகளமாகியது தாயகமே/





0 comments:

Post a Comment