கவிதை பிறந்த காவத்தையூர்






               


காவத்தை எனது  ஊரு
கவனிப்பாரற்று இருக்குது பாரு
பாதையோரம் பலாமரங்களின் வேரு
பசியை தீர்க்க பறந்தோடுது பாரு        
வீதியோரம் வீற்றிருக்கும் வீரகடவுளாரு-நாளும்
வினைகள் தீர்க்க காவல் செய்யுராரு
ஆடிவிழா தொடங்கியதும் ஊரு –பக்த
அடியார்களை வரவேற்கும் பாரு

அழகு தேரு பவனி வரும்போது
ஆலமர வாதுகூட அற்புதமாய் வளையுவாரு
காக்கும் களுங்கடியானின் கருணையாறு
நெடுங்காலமாய் எங்களுக்கு வழங்குவாரு
ஆண்டவன்மீது கொண்ட நம்பிக்கையாறு
ஆயள்வரை  வற்றாத  அழகிய ஆறு
பள்ளிக்கு சென்ற காலத்தோடு
பலாச்சுளையை சுவைக்க தருனமேது
புளோட்டோ சுவையை சுவைத்தவாறு
கலாட்டா எதுவும் இல்லாதவாறு
வீட்டை  வந்து  சேரும்போது

மணிக்கூட்டு முள்ளும் நகர்ந்திருப்பாரு
உடைகளை மாற்றியதோடு
உடனே போவேன் நண்பர்களோடு
உடற்பயிற்சி செய்யும் எண்ணத்தோடு
உளமார விளையாடுவேன் ஊரின் சகாக்களோடு
இனியும் மலருமா இப்படியொரு காலம்
தனியுமா எனது தாயக மோகம்...........



























0 comments:

Post a Comment