காதலின் அடையாளம்



தேய்ந்து வளரும் வெண்ணிலாவே
காய்ந்து போவது ஏன் நிலாவே
காதலர் மனதில் நுழைந்த நிலாவே
கதிரவன் ஒளியை கடன் வாங்கிய நிலாவே
வாழ்க்கையின் தத்துவம் சொன்ன நிலாவே
வயதாகியும் வாலிபனான வண்ணநிலாவே
சீதமான வேளைகளில் நிலாவே
ஞாபகமாய் நீ மலர்வாய் நிலாவே
கடனாய் ஒளியை வாங்கியதாளா நிலாவே
காரிருள் நேரத்தில் வருகிறாய் நிலாவே
இரவல் பெற்ற பொருளை நிலாவே
இனி இம்மையில் தருவாயா நிலாவே
உண்மையை சொல்லு நிலாவே-உன்னை
ஒரு நொடியில் முற்றுகையிடுவான் மேகமே

0 comments:

Post a Comment