தமிழுக்குத் தாலாட்டு


அகரத்தில் மலர்ந்த அன்னைத் தமிழே
ஆதியில் தோன்றிய வண்ணத் தமிழே
அகிலம் போற்றும் அழகுத் தமிழே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

முத்தமிழின் வித்தகமே
முவுலகின் மூத்தவளே
சித்தமெல்லாம் ஒளிபரப்பி
சிகரந் தொட்டு வாழ்ந்திடம்மா
இரத்தத்திலே நீ கலந்து
எண்ணத்திலே கருவுற்று
கவிதையாக பிறந்து வந்த
என் திரவியமே கண்ணுறங்கு
ஓராட்டு பாடியிங்கே
உன்னை வெல்ல நானிருக்கேன்
தாலாட்டு கேட்டு நீயும்
தரணியெங்கும் முழங்கிடம்மா
தீந்தமிழாய் இனிப்பவளே
திக்கெங்கும் ஒலிப்பவளே
தேசமெல்லாம் சுற்றி வந்து
திவ்விய நாதம் பாடிடுக் கண்ணே

0 comments:

Post a Comment