கடனும் வட்டியும்



தன்னிடம்  வாங்கிய இரவல்தனை
தந்துவிடுயென்றது   ஆழி
தாமதித்து தருவதாக உறுதி
பூண்டது கார்மேகம்
வரட்சியின் கோரத்தால்
வரண்டுப்போனது  பூமி
அதர்மத்தின் அதிகரிப்பால்
அழிந்துபோகுது நீதி 
உடனே தா! உயிர்நண்பனே!
உயிர்கள் அழியுது நாள்தோறுமே!
சினத்தின் வேகத்தால் சீன்ட
நினைத்தது மேகம் 
அடைமழையாய் 
அள்ளிதெளித்தது 
வட்டியும் கடனையும்!
கடனைதானே திருப்பி
கேட்டேன் தோழனே
கனத்த  உயிர்களை 
காவு கொண்டது
ஏன்  முகிலா!
கடனை மட்டும் கேட்டிருந்தால்
கச்சுதமாய் தந்திருப்பேன்
வட்டியுடன் கேட்டதாள்தான்
வாரி வழங்கிவிட்டேன்
அநியாயத்தை கண்டு தினம்
அமைதிகாக்க முடியாதெனக்கு 
அழுத அழுத  கண்ணீரையெல்லாம்
ஆத்திரத்தில் தூவிவிட்டேன்!
வட்டியுடன் தந்ததாள்தான்
கெட்டியாக உயர்ந்ததுவே
பொய்கைகளின்  நீர்மட்டம்!
தனப்பேராசை கூடியதால்
தாண்டவத்தை ஆடலானேன்
தர்மத்தை கூட்டி
அதர்மத்தை விரட்டி
ஆன்மீகத்தை ஊட்டி
அகமகிழ்ந்து அன்பாய்
வாழ வாழ்த்துகின்றேன் 
என்றது அழகிய வானம்



நிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்

 அப்பாவையும் அம்மாவையும்
அழகான  தம்பதிகளாய்
பார்த்து ரசிக்க ஆசை
அம்மாவின் அடிவயிற்றிலே 
அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை
உதைக்கும் போதெல்லாம் உரிமையோடு
தடவிவிடும் தருனத்தை பார்க்க ஆசை
கருவரை எனும் கற்பகத்தேரில்
விறுவிறுவென்று ஊஞ்சலாடிட ஆசை
தொப்புல் எனும் கொடியினூடே
தொடர்ந்து உண்டியுண்ண ஆசை
ஐரெண்டு மாதம் சுமந்த
அழகிய  சிம்மாசனம் 
பார்க்க  ஆசை
பிரசவ வலியை தாங்கி -என்னை 
பிரசவித்த பெருந்தியாகத்தை 
பார்க்க ஆசை 
பிறந்தபோது அகமகிழ்ந்து 
வாரியணைத்து முத்தமிட்ட
வதனத்தை பார்க்க ஆசை
அவ்வப்போது வந்து போகும் 
அடைத்த மூக்கு சளியோடு
தடிமல் எனும் பிணியை பார்க்க ஆசை
ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்று 
காத்திருந்து காலில்போட்டு 
தாலாட்டியதை பார்க்க ஆசை
சிரங்கு எனும் கொடிய நோய் 
சித்தரவதை செய்தபோது  மூலிகை 
போட்ட முதல் நாளை பார்க்க ஆசை
வறுமையின் கொடுமை 
சிறுமையில் வாட்டியபோது 
விசுக்கோத்தை தந்த
அப்பாவை  பார்க்க ஆசை
கல்வியை புகட்டுவதில் கரிசணையாய்
களமிரக்கிய காலத்தை பார்க்க ஆசை
ஆண்டி மகன் நல்ல பொடியனென
அனைவரும்  வாழ்த்திய 
வசந்த காலத்தை பார்க்கஆசை 
ஆடிவிழா காலங்களிலே அடிக்கடி 
யொலிக்கும் மணியோசை கேட்க ஆசை
குளப்படி செய்து கோடிபக்கம் நிற்கையிலே
வளக்கப்படி வந்து  வாரிலே அடித்தபோது
வாள்வாள்னு கத்திய காலத்தை பார்க்க ஆசை
திறமையாய் விளையாடும்போது
கைகளை தட்டிய எம்
கலைஞர்களை பார்க்க ஆசை
களிப்படைய கைகுழுக்கி  பரிசு 
தந்த பாக்கியவான்களை பார்க்க ஆசை
அரச்சுனன் தவம்  என்ற நாடகத்திலே
ஆர்வத்துடன் நடித்து போன
அழகிய நாளை பார்க்க ஆசை
சங்கீத நாற்காலி போட்டியிலே
சங்கமித்து  வெற்றி கனியை 
சுவைத்ததை பார்க்க ஆசை
அறிவிப்புக்கு அடித்தளமிட்டு கலக்கிய
அற்புத மேடையை பார்க்க ஆசை
கனகு கனகு என அடிக்கடி  முனுங்கும் 
சகபாடிகளை சளிக்காமல் பார்க்க ஆசை
எத்தனையோ நிஜமான நினைவுகளை 
நிச்சயமாய் பார்க்க ஆசை 
 நினைவுகளை சுமக்கதானே-தவிர
 இவையாவும்
 நிரைவேறா நிதர்சனமான ஆசைகள்

 







 

உயிர் தந்த உயிரே


சின்வனாய் நானிருந்தபோதம்மா
சின்னவரு என்று செல்லமாயழைத்த அம்மா
வறுமை வந்து வலைவிரித்தபோது
பொறுமையாக பசி தீர்த்தவளே அம்மா
பயந்து பயந்து ஒதுங்கியோடிய போதெல்லாம்
நயங்து நயந்து துனிவூட்டியவளே அம்மா
பிணி வந்து பிரச்சினை செய்தபோது
தனியா நின்று தாங்கிச் பிடித்தவளே அம்மா
வறுமையின் தன்மையை காட்டி வளர்த்தாளம்மா
வாழ்க்கையின் சுவையை உணர்ந்து கொண்டேனம்மா
பத்து மாதங்கள் சுமந்ததா அம்மா-என்றும்
எனது சொத்தே நீங்கள்தான் அம்மா
நாளும் புத்தியை உறைப்பதிலே அம்மா
தோல் கொடுத்தவளே நீங்கதானம்மா
அன்பை பொழிவதில் நீங்க ஆகாயமம்மா
அடைமழையாய் தினமும் தொடருதம்மா
ஆனந்தகண்ணீரே அடிக்கடி வருகுதம்மா-அதனால்
அணை கட்டி கவிவடிக்கினேனம்மா
பொறுமைக்கு அடையாளமானது பூமியம்மா-அதையும்
அருமையாக மிஞ்சிவிட்டீரே அம்மா
எனது இதயப்துடிப்பே நீங்கதானம்மா
எந்நேரமும் லப்டப் நாதமாய் ஒலிப்பது நீங்கதானம்மா
மங்காத மனது கொண்டதாள் அம்மா
தாத்தா மகிழ்வாய் இட்ட நாமமோ தங்கம்மா
தரணியில் அவதரித்த தங்க அம்மா
தயாள சிந்தையில் வாழனும் நீங்களம்மா
ஆண்டுகள் பல வாழனுமம்மா-அதில்
ஆயுள்வரை என்னை சுமக்க வேண்டுமம்மா
வாழ்க தாயே வளமுடன்
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு

மலையகத்தில் எழ வேண்டும் மகத்தான பல்கலைகழகம்

 அறிவுமிக்க ஆசான்களையும் 

ஆற்றல்மிக்க மாணவர்களையும்

தன்னகத்தே கொண்ட து   தரமிக்க மலையகம் 

மலையக மந்திரிமார்களே

மாற்றான் வீட்டு பிள்ளையாக திகளும்

 மாணவர்களுக்காக உருவாக்குங்கள்-ஒரு

உன்னதமான பல்கலைகழகம் 

எத்தனை வற்சரம் கடந்தும் 

இன்றுவரை எழவில்லை 

தமிழனுக்கென்று பல்கலைகழகம் 

சாதனைமிக்க சகபாடிகள் 

சங்கடத்தை வெளிகாட்டாமல்

ஆகுலத்தோடு அந்நிய 

பல்கலைகழகம் செல்கிறார்கள்

இந்நிலை தீர வேண்டும் 

இன்பமாக கற்க வேண்டும்

 





 


கவிதை பிறந்த காவத்தையூர்






               


காவத்தை எனது  ஊரு
கவனிப்பாரற்று இருக்குது பாரு
பாதையோரம் பலாமரங்களின் வேரு
பசியை தீர்க்க பறந்தோடுது பாரு        
வீதியோரம் வீற்றிருக்கும் வீரகடவுளாரு-நாளும்
வினைகள் தீர்க்க காவல் செய்யுராரு
ஆடிவிழா தொடங்கியதும் ஊரு –பக்த
அடியார்களை வரவேற்கும் பாரு

அழகு தேரு பவனி வரும்போது
ஆலமர வாதுகூட அற்புதமாய் வளையுவாரு
காக்கும் களுங்கடியானின் கருணையாறு
நெடுங்காலமாய் எங்களுக்கு வழங்குவாரு
ஆண்டவன்மீது கொண்ட நம்பிக்கையாறு
ஆயள்வரை  வற்றாத  அழகிய ஆறு
பள்ளிக்கு சென்ற காலத்தோடு
பலாச்சுளையை சுவைக்க தருனமேது
புளோட்டோ சுவையை சுவைத்தவாறு
கலாட்டா எதுவும் இல்லாதவாறு
வீட்டை  வந்து  சேரும்போது

மணிக்கூட்டு முள்ளும் நகர்ந்திருப்பாரு
உடைகளை மாற்றியதோடு
உடனே போவேன் நண்பர்களோடு
உடற்பயிற்சி செய்யும் எண்ணத்தோடு
உளமார விளையாடுவேன் ஊரின் சகாக்களோடு
இனியும் மலருமா இப்படியொரு காலம்
தனியுமா எனது தாயக மோகம்...........



























உண்மையின் விம்பம்

உங்கள் காதல்தான் உண்மையான
காதல் சூரியகாந்தியே!
ஒரு சில காதல் உண்மையானதாய்
காட்சிதரும்-ஆனால்
ஒரு நொடியில் கானல்நீராய்
தோன்றி மறையும்
நீ-காதலன் எனும் பகலவனின்
முகம் பார்த்து மலர ஏங்கும் தருனம்
மற்ற காதலருக்கு நீ சூட்டும்
படிப்பினை எனும் மகுடம்
ஒருவனுக்கு ஒருத்தியென்பது
ஒவ்வொருவரும் கூறும் வசனம்-ஆனால்
நீயும் அருணும் உணர்த்தும் சுபாவம்
அனைத்து காதலுக்கான பாடம்....................

ரோஜாவை தேடும் ராஜா

                         
          
                           ரோஜா இதழே
                                 ரோஜாவை பார்த்து ஏங்குகிறாள்
                                         கவர்ச்சியழகை கண்டு மகிழ்ச்சியா?
                                 இல்லை -கட்டழகை கண்டு அதிர்ச்சியா?
                                       கற்பை சூறையாடும் காடையர்கள்
                                  உலா வரும் இம்மண்ணிலே-இனிமேல்
                                              நீயும் கவர்ச்சியாய் மலரவேண்டாம்-ரோஜாவே
                                 கயவர் கூட்டம் உன்னையும் கற்பழித்துவிடுவான்
                                        என்ற பீதி சாதி சண்டையாய் உருவெடுக்கும்............
                                  என்ற ஆதங்கம் என்னை உருத்துகிறது