முதல் கவிதை

அன்பென்ற கடலில் விளைந்த முத்தே
அப்பா செதுக்கிய அழகிய சொத்தே
வயதோ உங்களுக்கு மூவைந்து
வைரமாய் மிளிரும் இளங்கன்று
மூன்று வயதில் முதுகில் சுமந்தே
மூவேளையும் உனையே நினைந்தேன்
ஆலைக்கு நானும் செல்கையிலே
ஆளுக்கு முதல் கிளம்புவீரே
கால்களை பிடித்துக் கொண்டு
கரைச்சலும் அன்று செய்தீரே
வளர்ந்து வாலிபனாக திகழ்ந்தாலும்
வாரியணைத்து கொஞ்சுவேன் செல்லமே
அனைவரின் மனிதிலும் இடம்பிடித்து
அப்பம்மாவின் இதயத்திலே குடிபுகுந்து
அருமந்தபிள்ளையான அபிக்குட்டியே
அன்பு உறவுகளது செல்லக்குட்டியே
சிகரந்தனை தான் தொட்டிடவே
தியாகம் செய்யும் தந்தையானேனே
கல்வியெனும் அழகைக்காண
காசினியிலே பல இருக்கார்
கரிசனையோடு கற்று தேர்ந்தால்
காலமெல்லாம் பான்மை மகனே
வாழ்க வாழ்க எந்தன் செல்லக்குட்டி
வாழ்த்துகின்றேன் கைகளைத் தட்டி
அகவைத் தின நாளின்றையா
அகமகிழ்ந்த ஆலாபனங்களை

தமிழுக்குத் தாலாட்டு


அகரத்தில் மலர்ந்த அன்னைத் தமிழே
ஆதியில் தோன்றிய வண்ணத் தமிழே
அகிலம் போற்றும் அழகுத் தமிழே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

முத்தமிழின் வித்தகமே
முவுலகின் மூத்தவளே
சித்தமெல்லாம் ஒளிபரப்பி
சிகரந் தொட்டு வாழ்ந்திடம்மா
இரத்தத்திலே நீ கலந்து
எண்ணத்திலே கருவுற்று
கவிதையாக பிறந்து வந்த
என் திரவியமே கண்ணுறங்கு
ஓராட்டு பாடியிங்கே
உன்னை வெல்ல நானிருக்கேன்
தாலாட்டு கேட்டு நீயும்
தரணியெங்கும் முழங்கிடம்மா
தீந்தமிழாய் இனிப்பவளே
திக்கெங்கும் ஒலிப்பவளே
தேசமெல்லாம் சுற்றி வந்து
திவ்விய நாதம் பாடிடுக் கண்ணே