ஆசைக்கொன்று அஸ்திக்கொன்றென
அடிமனதில் பதியமிட்டு
பூமியில் பிறந்த புத்திரர்களே நாங்கள்
கல்வியை கரிசனையோடு தொடர
கலையுணர்வோடு நிதமும் பயில
அப்பா பட்டப் பாடுகளை
அடுக்கி அடுக்கி இயம்புகிறேன் தேனு
பள்ளிக் காலமும் ஓடியொழிய
துள்ளி திரிந்தோம் துயரம் அகல
தொழிலும் கூடவே தொடர்ந்து வந்து
தும்பிப்பூச்சாய் பறந்ததுவே
வைகறையில் தானெழும்பி
வாசல் பக்கம் நடந்தார் தந்தை
வீட்டுக்குள்ளே வந்த மகான்
நின்று வீரிட்டு கத்தினாரே
அலரல் சத்தம் காதுக்குள் புக
அலட்டி போட்டு எழுந்தோம் உடனே
அமத்துவம் அடைந்தார் அப்பா
தனிமரமாய் நின்றேன் தரிகெட்டு பாப்பா
தமக்கையின் வாழ்வோ
தம்பியின் கையில்
தனியாய் நின்று உழைத்தேன் பையில்
தன்னலம் மறந்து தன்னில்லம் காத்தேன்
தைரிய மகனாய் தரணியில் வாழ்ந்தேன்
மணமகன் ஒருவரை தேடிப் பிடித்து
தமக்கையின் கையில் ஒப்படைத்து
வாழ்க்கையெனும் சோலைக்குள்ளே
வசந்தக்காற்றை வீசச் செய்தேன்
0 comments:
Post a Comment