நள்ளிரவு நந்தவனம்



மண்ணுலகிலே இருக்கிறதுவே
வடிவடிவான நந்தவனங்கள்
விண்ணுலகிலே இருப்பதுவோ
வேடிக்கையான நந்தவனம்
பற்பல மலர்களையெல்லாம்
பாரினிலே பார்த்ததுண்டு
பகலிரவாய் ரசித்ததுமுண்டு
எத்தனை முறை ஆசைப்பட்டாலும்
இரவில் மட்டுமே இன்பமுண்டு
இலவசமாய் பார்ப்பதாலன்று

இருபத்தேழு வகையான மலர்களெல்லாம்
இருட்டிலே மின்னுவதுண்டு
இடையிடையே மழைப் பொழிந்தால்
எப்படி ரசிப்பது கன்று
பூந்தோட்டம் காவல் காக்க
பூரிப்போடு வருகின்ற நிலவே
பூரணை தினத்தன்று
பொக்கிசமாய் நிற்பாளன்று
திங்களிலே திங்களுக்கு விடுமுறையுண்டு
திருடப்பார்க்குதே தேவதைகள் புகுந்து
பார்க்க பார்க்க திகட்டாத
பால் வண்ண பாசமலர்களே
படித்தவனும் பாமரனும்
பான்மையுடன் ரசிக்கும்
நந்தவனமே
நீலநிற பின்னனி கொடுத்து
நள்ளிரவில் மலரும் நந்தவனமே
இயற்கை நந்தவனம் தானமைத்து
இரவையும் சீதமாக்கி தந்த நந்தவனமே
எப்போதும் நாங்கள் உனது சொந்தமே

0 comments:

Post a Comment