தூய்மையான இதயங் கொண்டு
வாய்மையான பயணம் சிறந்து
வாழப் பிறந்த வாரிசு வரிசையில்
வழுக்கி விழுந்தனரே பலர்
இன்பமும் துன்பமும் இரண்டர கலந்து
இதமாக மெதுவாய் இதயத்திற்குள் புகுந்து
வாழ்க்கையின் தத்துவம் இயம்ப
வாதையுடன் நாளும் தேய்ந்ததுவே
சீதமான காற்றும் வீச
சில்லரையான வார்த்தைகளும் பேச
அமாவாசை தினத்தன்று
அர்த்தங்கள் பல புகட்டியதே
காதலித்த காதலர் சோடிகள்
களிப்புடன் சென்றனரே திங்களருகில்
ஒளியியை நேசிக்கும் உருவங்களே
ஓர் நாள் தேயும் பருவங்களே
வளரும் போது வாடாத அரும்பாய்
தேயும்போது தெம்புடன் எழுந்தாய்
நிலையற்ற வாழ்வின் நிலையாமையை
நிலவில் ஓர் நாள் கற்றுணர்ந்தேன்
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
0 comments:
Post a Comment