சொன்ன சொல் என்னாச்சி

சொன்ன சொல் என்னாச்சி
சூறாவளியில் உடைந்த வீடாச்சி
மனதார சொன்ன வாசகமோ
மாருதத்திலே உரசி போயாச்சி


ஒற்றையடிப் பாதையில
ஒன்றாய் இரண்டற கலக்கையில
உண்மைய சொல்லி வாராளென்று
ஊதாரியா யானும் உருகினேனே

சித்தத்திற்குள்ளே கலந்த சித்தம்
சிறைப்பட்டு கிடந்ததே நித்தம்
பெண்ணியம் போற்றிய பிதாவுக்கு
சூசகம் செய்த ராட்சசியே

அன்பையே யான் அடைக்களம் செய்தேன்
வம்பையே நீயோ இன்று வாரியணைத்தாய்
பண்பையே பாரிலே போட்டுடைத்த பாவியே
வீண்த்தெம்பை நீ வீட்டிலே விற்றதேனடி

நம்பியதற்கு விதைத்த நாற்றுமேடையா
நாயகனை ஏமாற்றிய நடைபாதையா
தன்னம்பிக்கையோ தனக்கிருக்கு
தலைகீழாக கலாச்சாரம் மாறியிருக்கு

தாலியை கட்டியதும் தாம்பத்தியம்
வேலியை உடைப்பதில் வீரசோழியம்
வேதனையான விண்ணப்பம் இன்று
சோதிடம் சொல்லியே சுட்டதிங்கே

சொன்னதை மறப்பது சுலபம் உனக்கு
எண்ணியதை இழந்தது எனது மக்கு
காலம் சொல்வதோ தெரியாதுனக்கு
கோலமாய் நிற்கையில் புரியுமுனக்கு

0 comments:

Post a Comment