தூதுசெல் துணையே


சொல்வதை சொல்லும் சுவர்ணகிளியே
என் சுந்தர வேண்டுகோளை சொல்லிடு கிளியே
தனிமையில் இனிமை எங்கே கிளியே
தத்ரூபமாய் சொல்லிடுவே பைங்கிளியே
காதல் நோய்க்கு மருந்தில்லை கிளியே
உன்  வாசகத்தால் தூய்மையாக்கு கிளியே
பலமடல்களை நித்தம் பறக்கவிட்டபோதும்
காதல்  பச்சைக் கொடி காட்டுதில்லையே
உண்மையை சொல்ல ஊடகமாய் பலயிருக்கு
உள்ள(த்திலுள்ள)தை சொல்லும் திறமை உனக்கிருக்கு
நம்பிக்கையில்லா நயவஞ்சகர்களை நம்ப முடியாதே
காதல் வெற்றிவாகை சூடுவது உன்னால் கிளியே

0 comments:

Post a Comment