தைமகளே வா

பல ஆண்டுகள் வந்து போன
பாசமான தைமகளே வா
மறத்தமிழனின் மான்புகளை
மகிழ்வுடனே எடுத்துரைக்க வா
பழையனவை கழித்து நித்தம்
புதியன புகுத்த புதுத் தெம்புடன் வா
பாரம்பரிய விளையாட்டுதனை
பதுக்கி பேசும் ஜீவனுக்கு
பகுத்தறிவை புகட்டி நீயும்
பாடம்தனை கற்பித்திட வா
கொஞ்ச கொஞ்சமாய் நம்மினத்தை அழிக்கும்
கொடூர  களையை பிடுங்கிட வா
பாலோடு தேன் கலந்து
பச்சரிசியை அதிலே போட்டு
பசப்பு வார்தையை கிள்ளி எரிந்து
இனிப்பெனும் இன்பத்தைத் தந்திட வா
தை பிறந்தால் வழி பிறந்தது அந்தக்காலம்
பேனா மைக் கொண்டு சீரழிப்பது இந்தக்காலம்
தமிழன் என்ற சொல்லுக்கான
தனித்துவத்தை இயம்பிட வா
தரங்கெட்டு செயலைப் புரியும்
குணங்களை நீ நீக்கிட வா
இத்தனையும் செய்ய வா
இன்பக்கடலில் மூழ்கிட வா
தலை நிமிந்து தமிழன் வாழ
தாரக மந்திரமாய் ஒலித்து வா

0 comments:

Post a Comment