விளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது
அன்று காதல் வாசம் வீசி
இதயத்தை ஸ்பரிசம் செய்தாய் நீயே
மனசும் அத்திவாரமிட்டு
அடைக்களம் தந்தது அன்பே
சல்லாபம் கொள்ள ஆசைப்பட்ட நீ
காதல் சங்கமிக்க மறுத்ததேன்
மாமனார் மகளே
காதல் பெயரை சொல்லி
மோதல் செய்தது நீதான் காதலியே
விளையாடிப் பார்க்க நானென்னை
விளையாட்டு பொம்மையா
அறியா எனது தூய மனது
அடிமையாகிப் போனது
உன் வாசகத்திற்கு
வாழ்க்கையில் விளையாடாதே பாவியே- காரணம்
வஞ்சகக்காரியறியா என் மனதே
வாழும்போதே வாழ்த்திவிடுகிறேன்
நீ வளமுடன் வாழ்கவென்று
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment