கண்களில் என்ன காயமோ

இம்மையிலே மனிதநேயம் எங்கிருக்கு
தூய்மையான இதயத்திலே குடியிருக்கு
ஒன்றுமறியா சீவனோடு ஒட்டியிருக்கு
உதவும்போது ஊருக்குள்ளே பரவியிருக்கு
பிஞ்சுயுள்ளத்திலே நஞ்சை விதைத்தவர் யாரோ
பஞ்சு போன்ற பெதும்பைக்கு பாசந்தருவாரோ
வஞ்சியவள் கெஞ்சு கேட்கும் வரமும் கிடைக்காதோ
தேய்ந்துபோன செருப்பை தரும் தங்கமகன் யாரோ
பூமாதேவி சினங்கொண்டு பொங்கியெழுந்தாளோ
வெம்மையின் விளையாட்டால் விம்மி விம்மி அழுகிறாளோ
பாசமெனும் வேசம் காட்டும் இப்பாரினிலே
நேசமெனும் நெஞ்சம் கொண்ட தயாள மனிதன் தானோ
பெற்றோர் யாரென பேட்டி காணும் முன்னே
மற்றவர்களின் மனிதம் மன்டியிடுகிறதிங்கே
கற்றாரின் கால்களென்ன இரும்பா
கடிவாளம் பூட்டிய குதிரையா
வாழும்போது வாழ்த்த வேண்டிய மனிதா
வஞ்சனை செய்வதே உனதியல்பா
நல்வழி காட்டியவள் நமதவ்வை
அவ்வழி செல்வதே அனைவரினதும் வேலை

0 comments:

Post a Comment