அன்பின் அடையாளம்

அம்மா எனும் அமிர்தமே
அகிலத்தின் முதல் சிகரமே
அன்பின் அழகிய வடிவமே
அடியேனை ஈன்ற தெய்வமே
உதிரத்தை மாற்றிய உருவமே
உறவின் உன்னத தோற்றமே
தொப்புள் கொடியின் தொடக்கமே
தொய்வில்லா தொடரும் கூட்டமே
உண்டியின் சுவையான திலகமே
உமிழ்நீரும் ஊறுது நாளுமே
அன்றில் பறவையின் அடையாளமே
அரவணைப்பின் அழகு அத்திவாரமே
இத்தனை காலம் கடந்துமே
இடுப்பில் சுமந்த இதயமே
மனதில் சுமந்த மாணிக்கமே
மாதாவே எனது சொர்க்கமே
காலங்களை வென்ற கற்பகமே
சோகங்களை விரட்டிய சுந்தரமே
ஆண்டுதோறும் மலரும் அன்னையர் தினமே
தாய்ப்பாலை நினைவூட்டுது தங்கரதமே
ஓராண்டு உதயமாகும் இத்தினமே
ஒவ்வொரு நாளும் மலர்ந்தால் சுகமே
தேனாய் தித்திக்கும் திங்களே
கரும்பாய் இனித்திடும் பொங்கலே
வாழ்க வாழ்க பல்லாண்டு தாயே
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு சேயே

0 comments:

Post a Comment