பாவி மக ஒன் நினப்பு


பாவி மக ஒன் நினப்பு
என்ன பாடாப்படுத்துதடி
வயசுக்கு வந்த புள்ள
வாழத்தண்டு போல வெள்ள
ஆசாபாசம் கூட வந்து
அடிமனத தட்டுனுச்சி

பாசம் செஞ்ச பாவமென்ன
மோசம் செய்ய முந்திருச்சி
அன்பு என்ற வார்த்தைகுள்ள
அரளி விதைய தூவிருச்சி

காதல் என்கிற கானல்நீர
களவு தனமா ஊத்திருச்சி
காதல் செய்ய ஆசப்பட்டு
கால்கடுக்க காக்க வச்சி
கண்ணே ஒன் மனசுகுள்ள
காவி இழுத்து உறிஞ்சிருச்சி

பாசங் காட்டுர ஒன்ன நெதம்
பாக்க நானு ஓடி வந்தேன்
மோசஞ் செய்யும் ராக்காச்சினு
முன்னமே தெரிஞ்சிருந்தா
தல மொழுகி ஒதிங்கிருப்பேன்
தல நிமுந்து வாழ்ந்திருப்பே

அன்புங்கிர பாசங் காட்டி
வம்ப நெதம் வளர்த்தவளே
நம்ப சொந்தோம் அத்துப்போச்சி
நாளு பேருக்கு தெரிஞ்சிப்போச்சி

அவனோட சரி அன்பா வாழு
அன்பு மச்சா சொல்றத கேளு
பாசோம் என்பது ஒனக்கில்ல
பாடாப்படுத்துது ஓன் நெனப்பு புள்ள

0 comments:

Post a Comment