தலையணைமந்திரம்
காதல் கொண்ட பைங்கிளியே
கடலலையாய் கனவை தந்தவளே
தலையணையின் காதுக்குள்ளே
தந்திரமாய் என்ன சொன்னாய்
போன மச்சான் திரும்பி வந்தாள்
வேனா சகவாசம் இவன்மேலென்று
விபரமாய் சொல்லிட்டாளோ
நிசப்த நேரவேளையிலே நிம்மதியை
தொலைத்த கதைய சொல்லு
தூங்க நானும் போகையிலே
தொந்தரவாய் வந்து போன
தொலைபேசியிடம் கேட்க சொல்லு
குறுஞ்செய்தி எழுதி எழுதி
கொடுமைபட்ட உன் மனதை கேளு
உறக்கம் வரும் போதெல்லாம்
உனையனைத்து கொள்வாளே
அவள் சொன்ன மந்திரத்தால்
அவதிபட்டது நீதானே
தந்திர கார ராட்சசியினு
சட்டமன்றத்தில் வழக்குத்தொடு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment