மக்கள் போற்றும் மாமனிதன்






கருணையுள்ளங் கொண்ட அப்துல்கலாம் ஐயாவே
நானும் உங்கள் தொப்புல் கொடி பையாதானே
மெய்ஞானம் பல கற்று அதில்
விஞ்ஞானத்தை வென்றவரே
அமுத மொழி பொழிந்தவரே-அதை
தேனமுதாய் நாவில் தினித்தவரே

பிரம்மசரியம் பூண்டு நிதம்
பெரும் தியாகிகளை வென்றவரே
எரிகணைகளை தான் செய்து
எதிரிகளை நிதம் மிரட்டியவரே

இலங்கையிலிருந்த மானிடர்களை
இறக்குமுன்பு வந்து பார்த்தவரே
காலங்களும் கடந்து போச்சி
கனவுகளும் இன்று கலைந்து போச்சி
இலட்ச்சிய கனவு கானுகின்றோம்
நிச்சயமாய் மீண்டும் பிறப்பீர்களென்று

கனவு பழிக்க வேண்டுமையா-தமிழ்
களைபிடுங்கி செழிக்க வேண்டுமையா
வருத்தம் வந்து உங்களை வாட்டியபோது
என்னுயிரை எடுயென இயமனிடம் சொன்னேன்
நீங்கள் விதைத்து சென்ற சிந்தனை விதைகளெல்லாம்
எனது மனச்சோலையிலே விருட்சமாய் நிழல் தருகுதையா
விண்ணிலிருக்கும் உங்கள் விம்பத்துக்கு
மண்ணிலிருந்து மலர் தூவுகிறேனையா

0 comments:

Post a Comment