அப்பாவின் அமரத்துவ நினைவுநாள்

அன்புள்ள எனது தங்க அப்பா
அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது
ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால்
அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறியலையாப்பா
ஆண்டுகள் பதிமூன்றை கடந்தாலுமப்பா-நீங்கள்
அடிமனதில் பதித்து சென்ற நினைவுகள்
என்றுமே இதயத்திலிருந்து பிரியாதப்பா
நல்ல உள்ளங்களை வாழ வைப்பதில்
நாட்டமில்லை இறைவனுக்கப்பா-நாம்
அவதரித்த தரணியில் தனக்கென இடமில்லாமல்
போகுமென்று ஆண்டவனுக்கு பயமப்பா-ஆகையால்தான் உங்களின் ஆத்மாவை தன்வசம் இழுத்துக்கொண்டாரப்பா
நீங்க தெய்வ திருவடியில் அடைக்களம் புகுந்ததாளப்பா
இன்று யான் உங்களுக்கு திவசம் செய்கிறேனப்பா
ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவுகள்-என்னை
ஊக்கபடுத்தனுமப்பா
உளமார யான் தங்களிடம் கெஞ்சி கேட்கிறேனப்பா.....உங்கள் ஆத்மா சாந்தியாக இருக்க ஆண்டவன் அருள்மழை பொழிவாரப்பா.....