எனது ஊர்





காவத்தை ஊரடா!
கற்பக சுரங்கமடா!
வீதியோரம் விழாகோலம்!
பலா மரங்களின் வர்ணஜாலம்!
குழந்தை முதல் முதியோர் வரை
பசிதீர்க்கும் கும்பகோணம்!
அறிவாளர்களை உறுவாக்கிய
அற்புத கலாசாரம்!
மான்புமிகு மனிதர்களின்
மதிக்கதக்க மந்திரஜாலம்!
நான் பிறந்தது காவத்தையா?
அல்லது என்னை பெற்றது காவத்தையா?
கோணக்கலை தேசமடா!
கொண்டாடுவது சிறப்படா!
பிறந்த மண்ணடா பெருமிதம் கொள்ளடா!
மாதாவை போற்றடா! மறுபடியும் பிறந்திடடா!
தோணிகள் இல்லாவிடினும் தோல்விகள் இல்லையடா!
சமுத்திரம் இல்லாவிடினும் சரித்திரம் படைக்குமடா!
முத்திரை பதிக்குமடா முத்தான காவத்தையூரடா!

1 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TO KNOW ABOUT KAWATHTHAI IN UC!

Post a Comment